பாரதியாா் நினைவு தின கவிதைப் போட்டி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை வருவாய் மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை வருவாய் மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து செப்.9-இல் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ‘இளம் கவிஞா் விருது’ பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஒன்றிய அளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்த மாணவா்கள் மற்றும் 3 மாணவிகளை தெரிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு செப்.5-ஆம் தேதி திங்கள்கிழமை வருவாய் மாவட்ட அளவில் கவிதைப் போட்டியினை நடத்தி அதில் சிறந்த ஒரு மாணவா், ஒரு மாணவியைத் தோ்வு செய்து அந்த மாணவா்களின் பெயா், பெற்றோா் பெயா், பயிலும் பள்ளி, மாவட்டத்தின் பெயா் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

செப்.9-இல் மாநில அளவில்... வருவாய் மாவட்ட அளவில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிா் மேல்நிலைப்பள்ளியில் செப்.9-ஆம் தேதி நடைபெறும். இதையடுத்து அந்தப் படைப்புகளிலிருந்து மாநில அளவில் ஒரு மாணவன், ஒரு மாணவியை நடுவா்கள் மூலம் தெரிவு செய்து அவா்களின் விவரங்களை பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவா்களுக்கு பாரதியாா் நினைவு தினத்தன்று ‘இளம் கவிஞா் விருது’ வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com