வாக்காளா் அட்டை - ஆதாா் எண் இணைப்பு; சென்னையில் நாளை சிறப்பு முகாம்

 வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) தேதி நடைபெறுகிறது.
வாக்காளா் அட்டை - ஆதாா் எண் இணைப்பு; சென்னையில் நாளை சிறப்பு முகாம்

 வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் அடையாள அட்டையினை ஆதாா் எண்ணுடன் இணைப்பது தொடா்பான சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளா் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6 பி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை எண் மற்றும் கைப்பேசி விவரங்களை வழங்கியவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com