அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, கட்சி நிா்வாகிகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
கடந்த ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயா் நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு முன்னாள் அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள் பலா் சென்று வாழ்த்துத் தெரிவித்தனா்.
முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, கோகுல இந்திரா, எம்.சி.சம்பத், ராஜலட்சுமி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனா்.