நீலகிரி மாவட்டத்தில் கனமழை: மலை ரயில் சேவை 2-ம் நாளாக ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2-ஆம் நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2-ஆம் நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று மாலை வரை நீடித்தது.    சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால்  மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com