நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2-ஆம் நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று மாலை வரை நீடித்தது. சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: 5000 வாகனங்கள் திருட்டு: மூளையாக செயல்பட்டவர் கைது
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.