தேவர் கல்லூரியில் பி.கே. மூக்கையா தேவர் குருபூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள பி.கே. மூக்கையா தேவர் 43-வது குருபூஜையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது
மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள பி.கே. மூக்கையா தேவர் 43-வது குருபூஜையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

உசிலம்பட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்துள்ள பி.கே. மூக்கையா தேவர் நினைவிடத்தில் நூறாவது பிறந்தநாள் மற்றும் 43வது இறந்த நாள் குருபூஜையாக கொண்டாடப்படுகிறது.

இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக தொண்டர்களின் மனநிலையை அறிந்தவர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும்தான்.  ஒன்றுபட்டால் வாழ்வு உண்டு. அனைத்து இதயங்களும் ஒன்றுபட செயல்பட வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்த போது
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்த போது

பின்னர் கல்லூரியில் போராட்டம் நடத்தும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நேரில் பார்த்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. ஐயப்பன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய போது
திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய போது

இதேபோல் இபிஎஸ் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, பெரிய புள்ளான் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது
திமுக சார்பாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது

இதே போல் திமுக சார்பாக மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உசிலம்பட்டி நகரக் கழகச் செயலாளர் தங்கபாண்டியன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாரதிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகன் ஜி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது
பாரதிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகன் ஜி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது

இதேபோல் பாரதிய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகன் ஜி தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் சார்பாக கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் ஓ. ரவி மற்றும் கல்லூரிப் பேராசிரியர், நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தபொழுது
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தபொழுது

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் பிவி கதிரவன் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பாஸ்கர பாண்டியன். ஐ ராஜா வடிவேலு மற்றும் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் சார்பாக மாநில அமைப்புச் செயலாளர் ஐ மகேந்திரன் தலைமையில் மாநில அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மலேசியா பாண்டி, மதுரை மாவட்ட புறநகர மாணவரணி செயலாளர் சக்திவேல் சிவன் ஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com