பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு: திருத்தங்கள் வேண்டும் -நீதிமன்றம்

அரசு பணியில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரசு பணியில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு சட்ட பிரிவின் கீழ் 30 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு புதன்கிழமை இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், முதலில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, பிறகு சமுதாய ரீதியிலான ஒதுக்கீடு என்பது தீர்ப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டியது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது என்றும், அதேவேளையில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com