சென்னை: விசாரணைக்கு அழைக்க எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்பவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிய அதிகாரங்களில் நீதிபதி தலையிடுவதில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு அழைக்க எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்பவேண்டும். சம்மன் அனுப்பும்போது ஆஜராக வேண்டிய நாள், நேரத்தை குறிப்பிட வேண்டும். விசாரணையின்போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக குறிப்பெடுத்து வைக்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க கோரியும் பல மனுக்கள் தாக்கலாகின்றன. திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரஜௌரியில் கட்டுப்பாடுகள் தளர்வு: இயல்பு வாழ்க்கை திரும்பியது
விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.