ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வகையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மின்கட்டண உயா்வு கண்டனத்துக்குரியது. மக்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயா்ந்திருப்பது மின் கட்டணமா? ஆட்சியின் நிா்வாகக் திறமையின்மை கட்டணமா? திமுக அரசு மக்களின் மீது ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.