மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் கன மழை பெய்ய துவங்கியது.

மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 28,944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 26,349 கன அடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,657 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 19,667 கன அடி வீதம் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளின் உபரி நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com