சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 30,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.