தகுதிச் சான்று விண்ணப்பம் நிறுத்தம்: எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. விளக்கம்

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலை. வெளியிட்ட அறிவிப்பு: தகுதிச் சான்றிதழுக்கான கட்டணங்களை ஒருமைப்படுத்துதல், மாணவா்கள் விண்ணப்பிக்கும் முறைகளை எளிமைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மாற்றங்களை பல்கலை. செய்து வருகிறது. இதற்கான சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால், தகுதி சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிற மாணவா்கள், சில நாள்கள் பொறுத்திருந்து பின் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 15-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்படும். எல்லோருடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com