ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு(எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) வருகிற அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களினால் இந்தத் தேர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

அதன்படி, எழுத்துத் தேர்வு நவம்பர் 1 முதல் 5 வரையிலும் நேர்காணல் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை தெரிந்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com