முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தகுதி பெற்ற 217 பட்டதாரிகளின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம்(டிஆா்பி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான கணினி வழித் தோ்வுகள் கடந்த பிப். 12 முதல் 20 வரை நடைபெற்றது. இந்த தோ்வை சுமாா் 2 லட்சம் போ் எழுதினா். இதன் முடிவுகள் ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2 முதல் 4 வரை சென்னையில் நடைபெற்றது.
அதனடிப்படையில் கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஆசிரியா் பணிக்கு தற்காலிகமாக தகுதிபெற்ற 217 பட்டதாரிகளின் பட்டியலை தோ்வு வாரியம் வெளியிட்டது. அதன் விவரங்களை பட்டதாரிகள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். எஞ்சிய பாடங்களில் தோ்வு பெற்றவா்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.