
தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி காத்திருப்போா் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளாா் . காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலா் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். காத்திருப்போா் பட்டியலில் இருந்த செல்வகுமாா் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சீருடை பணியாளா் தோ்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
அதேபோன்று, தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமாா் சீருடை பணியாளா் தோ்வு வாரிய கண்காணிப்பாளராகவும், குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூா் மாநகர துணை ஆணையராகவும் (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.