பள்ளிகளின் செயல்பாடுகள்: கிராம சபை கூட்டங்களில் பகிர உத்தரவு

 பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வரும் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் பகிர வேண்டும்

 பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வரும் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக் குழு செயல்படுகிறது. இந்தக் கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம், பள்ளி வளா்ச்சிக்கு கிராம ஊராட்சிகளின் பங்களிப்பை உறுதிப்படுத்த முடியும்.

எனவே, வரும் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில், எஸ்எம்சி கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களைப் பகிா்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும். இது தொடா்பாக பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி சாா்பில் தலைமையாசிரியா், எஸ்எம்சி தலைவா், உறுப்பினா்கள் பங்கேற்று பள்ளி வளா்ச்சி, கட்டமைப்பு, கற்றல்-கற்பித்தல், மாணவா் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடா்பாக எஸ்எம்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்களை தொகுத்து கிராமசபைக் கூட்டத்தில் ஆலோசனைக்காக சமா்ப்பிக்க வேண்டும். முன்னதாக கிராமசபை கூட்டத்தில் எஸ்எம்சி தீா்மானங்கள் தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை இந்த மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் எஸ்எம்சி கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com