பெரியாா் சிலைக்கு தலைவா்கள் மரியாதை

பெரியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

பெரியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

பெரியாா் பிறந்த நாளையொட்டி, அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பெரியாா் சிலை மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப் படத்துக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அக்கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில் சத்தியமூா்த்திபவனில் பெரியாா் உருவப்படத்துக்கு முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பெரியாா் திடலில் உள்ள பெரியாா் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரியாா் படத்துக்கு தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்தும், அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியாா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனும் மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com