தில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இந்த நிலையில், அவா் சென்னை விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். 3 நாள் பயணமாகச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை சந்திப்பாா் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
அதிமுகவில் உள்கட்சி மோதல் நடைபெறும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பயணம் அரசியல் வட்டாரத்தில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.