மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1.264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார் என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com