ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.
வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேனி, திண்டுகல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 100 நிர்வாகிகள் கைது
சட்டவிரோத பண பரிவர்த்தனை, பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது என்ஐஏ அதிகாரிகளுடன் அமலாக்கத் துறையினர் இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாலையிலிருந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.