மாநில அளவிலான தடகளப்போட்டி: தேர்வு பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான தடகளப்போட்டி: தேர்வு பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டு



நீடாமங்கலம்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் கிருஷ்ணா 800 மீட்டர் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

11 ஆம் வகுப்பு மாணவன் அகிலன் ஈட்டி எரிதலில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும், 12 ஆம் வகுப்பு மாணவன் பிரதீப் தடைதாண்டுதல் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.பிரிதிவிராஜ், பி.நந்தகுமார் ஆகியோரையும் பள்ளி நிறுவனர் உ.நீலன், பள்ளி தாளாளர் நீலன். அசோகன், பள்ளி செயலாளர் அ.சுரேன், பள்ளி முதல்வர் ஹேமாமாலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வெகுவாகப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com