தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.
தருமபுரி சந்தைப்போட்டை பகுதியில் வாடைகைக்கு குடியிருந்த ஒரு குடும்பத்தினர் வியாழக்கிழமை வீடு காலி செய்துள்ளனர்.
அப்போது, மாடியில் இருந்து பீரோவை கீழே இறக்கும்போது பீரோவில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்தவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிக்கைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.