காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 3 ஆவது நாளாக வினாடிக்கு 15,000 கன அடியாக நீடித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருந்தது.
இதையும் படிக்க | அமலாகிறது வங்கி அட்டைகளுக்கான ‘அடையாள எண்கள்’!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.