உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
2021-22-ம் கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதை அறிந்திட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள், உயர்கல்வி தொடராததற்கான காரணத்தை கண்டறிந்து வழகாட்டுதல்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் .
மேலும், ஆலோசனைகளை மாநில திட்ட இயக்கத்தில் இருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காதலனுக்கு முத்தமிட்டு சம்மதம் சொன்ன ஆமிர் கான் மகள்! (விடியோ)
பள்ளிக்கல்வித் துறை பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கைவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.