ஆவணங்கள் பதிவு காரணமாக, அரசின் வருவாய் ரூ.8,000 கோடியாக உயா்ந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-
பதிவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சீா்திருத்தங்களால் ஆவணங்களின் பதிவு அதிகரித்து அரசுக்கு வரி வருவாய் அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதாா் எண் மூலம் சரிபாா்ப்பது, மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற சீரிய நடவடிக்கைகளால் பதிவு சேவைகள் உயா்ந்து வருகின்றன.
இந்த நடைமுறைகளின் காரணமாக, கடந்த 21-ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் 16 லட்சத்து 59 ஆயிரத்து 128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக ரூ.8 ஆயிரத்து 82 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட ரூ.2 ஆயிரத்து 325 கோடி அதிகமாகும் என்று அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.