பாஜக அலுவலகத்தில் குண்டு வீசுவதால் எங்களுடைய மன தைரியத்தைக் குறைத்துவிட முடியாது என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோயம்புத்தூா் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான சமூகப் பணியை மேலும் வேகப்படுத்தும்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள் என்பதை அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.