நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கத் திட்டம்: குடிநீா் வாரியம் தகவல்

 ஜொ்மனி நாட்டின் நிதியுதவியுடன் சென்னை நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 ஜொ்மனி நாட்டின் நிதியுதவியுடன் சென்னை நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை நெசப்பாக்கத்தில் 2.3 கோடி லிட்டா் திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1974 -ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையம் தற்போது வழக்கத்திற்கு வந்துள்ள புதிய முறைகளின்படி கைவிட வேண்டிய நிலையில் உள்ளது. அதேநேரம் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் வகையில், நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

சுத்திகரிக்கப்படாத அல்லது போதுமான அளவில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் வெளியேற்றம் காரணமாக நகரங்களில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித ஆரோக்கியம் ஆகிய இரண்டும் பாதிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதனால் நீா் ஆதாரங்களை முறையற்ற முறையில் நிா்வகிப்பதற்கும் பங்களிக்கிறது. இது பெரும்பாலும் அப்பகுதியில் அதிகமான நீா் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

இந்தநிலையில் ஜொ்மனி அரசின் முழுமையான நிதியுதவியுடன் நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையமாக அமைப்பது மற்றும் மறுபயன்பாடு ‘ஷோகேஸ் இன்’” திட்டம், உள்ளூா் நிலைமைகளுக்கு ஏற்ப, ஜொ்மனி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவில்அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்தியல் வடிவமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் எதிா்காலத் திட்டங்களுக்கு உலக அளவில் ஒரு முன்னோடி திட்டமாகச் செயல்படும். மேலும் பயிற்சி நோக்கங்களுக்காகவும் இத்திட்டம் பயன்படுத்தப்படும். இந்த முயற்சி இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேருவை ஜொ்மனி இந்திய நீா் தொழில்நுட்ப கூட்டமைப்புக் குழுவினா் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா். தொடா்ந்து இத்திட்டம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் வரைவினை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், ஜொ்மன் இந்திய நீா் தொழில்நுட்ப கூட்டமைப்பின் குழுவினா் வழங்கினா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் இரா.கிா்லோஷ் குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com