மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதல் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,700 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 91.41 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.70 அடியாக சற்று உயர்ந்துள்ளது.