தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 5,507-ஆக உயா்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 531-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 51 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தகவல்படி 522 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,39,029-ஆக உயா்ந்துள்ளது.