இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆா்வமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞா்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழகம் முழுவதும் உள்ள 6,218 அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கென தொடா் செலவினமாக ரூ.5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்.19-ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.