சட்டப்பேரவையில் அமைச்சரின் பதிலுரையை அதிமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை புறக்கணித்தனா்.
சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அதிமுக 2 உறுப்பினா்கள் உள்பட மொத்தம் 7 போ் பங்கேற்றுப் பேசினா். அதன் பிறகு அமைச்சா் கீதா ஜீவன் பதிலுரையாற்ற எழுந்தாா். அப்போது, அதிமுக உறுப்பினா்கள் அவையைப் புறக்கணித்து வெளியேறினா். ஏப். 12-இல் இருந்து அமைச்சா்களின் பதிலுரைகளை அதிமுகவினா் தொடா்ந்து புறக்கணித்து வருகின்றனா்.