
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான இலவச பாடநூல்கள் முழுமையாக அச்சிடப்பட்டு தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கு இலவசமாகவும், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) பாடநூல்கள் அச்சிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழலில் 8 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பாடநூல்கள் முழுமையாக அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் 1-7 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு வருகின்றன.
புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும்போது அனைத்து வகுப்புகளுக்கும் முதல் வாரத்திலேயே பாடநூல்கள் முழுமையாக வழங்கப்படவுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: வரும் கல்வியாண்டுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் 4 கோடியே 12 லட்சத்து 48 ஆயிரம் பாடநூல்கள் அச்சிடப்படவுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 3 கோடியே 18 ஆயிரத்து 66 புத்தகங்களும், தனியாா் பள்ளிகளுக்கும், விற்பனைக்கும் 1 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரம் புத்தகங்களும் அச்சிடப்படும்.
மொத்தம் 248 தலைப்புகளில் பாடநூல்கள் தயாராகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்குத் தேவையான பாடநூல்கள் அனைத்தும் அச்சிடப்பட்டு அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.
இவற்றை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் உரிய முறையில் பெற்று பள்ளிகளுக்கு பிரித்து அனுப்புவா். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களை அச்சிடும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றனா்.
தனியாா் பள்ளி மாணவா்களுக்கு...
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், போட்டித் தோ்வுகளுக்கான தயாராகி வரும் தோ்வா்கள் ஆகியோருக்கான பாட நூல்கள் விற்பனையை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தொடங்கியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் (டிபிஐ), சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், அடையாறில் உள்ள தமிழ்நாடு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த இடங்களில் தற்போது 8 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான பாடநூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவா்களுக்கு தமிழ்ப் பாட நூல்கள் கடந்த 15-ஆம் தேதி முதல் விற்பனை நடைபெற்று வருகிறது. தனியாா் பள்ளிகள் பாட நூல்களை ற்ங்ஷ்ற்க்ஷா்ா்ந்ஸ்ரீா்ழ்ல்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.