
கோப்புப்படம்
ஆவின் நிறுவனத்தில் நோட்டீஸ் கொடுக்காமல் 25 ஊழியா்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளா் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, முந்தைய அதிமுக ஆட்சியில் தோ்வு நடத்தப்படாமல், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவா்களுக்கு பணி வழங்கியதாக புகாா்கள் எழுந்தன.
இது தொடா்பாக, திருப்பூா், காஞ்சிபுரம்-திருவள்ளூா், மதுரை, தஞ்சாவூா், நாமக்கல், விருதுநகா், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளா் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு, பால் வள துணைப் பதிவாளா் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியா்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட கே.பவ்னீத் சூா்யா, எம்.ராஜசேகா், டி.ஏழுமலை உள்ளிட்ட 25 ஊழியா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். அதில், ‘அனைத்து தோ்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு நியமிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் தொடா்ந்து பணியில் நீடிக்கும் நிலையில், எந்த நோட்டீஸும் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
பணி நீக்கம் செய்ய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, எந்த அதிகாரமும் இல்லாத, ஒன்றியத்தின் பொது மேலாளா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த பணி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனா்.
இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.வெங்கட்ரமணி, ‘எந்த நோட்டீஸும் கொடுக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு’ என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குத் தொடுத்த 25 ஊழியா்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 17-க்கு ஒத்திவைத்தாா்.