தனது தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வருகிற ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சட்டப்பேரவை தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்தினார். மேலும் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.