ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்கள்: ஜன.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா் தொகுப்பூதிய பணியிடங்களுக்கு ஜன.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா் தொகுப்பூதிய பணியிடங்களுக்கு ஜன.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியா் / பட்டதாரி ஆசிரியா்கள்: ‘வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியா் தகுதித் தோ்விலும் தோ்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணியாற்றி வருவோா் விண்ணப்பிக்கலாம். பட்டியலினத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வுக்கு, ஆசிரியா்கள் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்கள் பங்கேற்கலாம்.

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவா்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவா்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.12,000 ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபா்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ, அஞ்சல் மூலமாகவோ ஜன.18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம்’ என சென்னை மாவட்ட ஆட்சியா் அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com