பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி (ஜன.13, 14) மற்றும் ஜன.18-ஆம் தேதியில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி (ஜன.13, 14) மற்றும் ஜன.18 - ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 12 மணி வரை இயங்கும்.
மேலும், ஜன.18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.