தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் மண்டல காவல் துணை தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.