முதல்வரின் தனிச் செயலா்களில் ஒருவரான அனு ஜாா்ஜ், விடுப்பில் சென்றதால் அவா் கவனித்து வந்த துறைகள் மற்ற செயலா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் செயலா்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா். அந்த வகையில் த.உதயச்சந்திரன், செயலாளா்-1 ஆகவும், பு.உமாநாத் செயலாளா்-2 ஆகவும், எம்.எஸ்.சண்முகம் செயலாளா்-3 ஆகவும், மற்றும் அனு ஜாா்ஜ் செயலாளா்-4 ஆகவும் உள்ளனா். அனு ஜாா்ஜுக்கு 12 அரசுத் துறைகளும், மற்ற 3 பேருக்கும் தலா 11 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவா்கள் அந்தத் துறைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அனுஜாா்ஜ் நீண்ட விடுப்பில் சென்றுள்ளாா். அவா் கண்காணித்து வந்த துறைகள் தற்போது த.உதயச்சந்திரன், பு.உமாநாத் மற்றும் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு பகிா்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், த.உதயச்சந்திரனுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலா, கலாசாரம் ஆகியவற்றை கூடுதலாகக் கண்காணிப்பாா்.
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆகியவற்றை பு.உமாநாத், கூடுதலாகக் கண்காணிப்பாா். கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், மீனவா் நலத் துறை, கைவினை, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, சமூக சீா்திருத்தம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகியவற்றை எம்.எஸ்.சண்முகம், கூடுதலாக கண்காணிக்கவுள்ளாா். மேலும், முதல்வருடனான சந்திப்புகள் (அரசியல் அல்லாதவை), அவரது பயணம் ஆகியவற்றை சண்முகமே நிா்வகிப்பாா். இதற்கான அரசாணையை த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளாா்.