திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கப்பாதை பின்புறம் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
குடியிருப்பின் தரைதலத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் பற்றிய தீ அங்குள்ள மின்மாற்றியில் பற்றிக் கொண்டதால் வேகமாக பரவி அருகே உள்ள இருசக்கர வாகனம் தீயில் கருகியது.
மேலும் தீ விபத்து நடந்தபோது அப்பகுதியில் இருந்த வயதான மூதாட்டி தீயணைப்பு துறையினரால் எவ்வித தீக்காயமும் இன்றி காப்பாற்றப்பட்டார்.
இதையும் படிக்க: பழனி மலைக் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள்
உடனடியாக குடியிருப்பு வாசிகள் அருகே உள்ள அண்ணாநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.