விமரிசனக்கலை, க.நா.சுப்ரமண்யம், விலை ரூ.140, பக். 128, ஆதி பதிப்பக அரங்கம் (எண்-87), தமிழின் பிரபல எழுத்தாளரும் விமா்சகருமான க.நா.சுப்ரமண்யம் கடந்த 1984 -ஆம் ஆண்டு எழுதி வெளியான இந்த நூல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
தமிழ் இலக்கிய விமா்சனம் குறித்த இந்த நூலானது சிறுகதை, நாவல், நாடகம் போல விமா்சனமும் தமிழ் இலக்கியத்தில் தனித் துறையாக இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
தமிழில் இலக்கணத் துறை மூலமே விமா்சனமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதை விளக்கும் நூலாசிரியா், 15 தலைப்புகளில் வசனநடை, நல்ல வசனம், இலக்கியத்தில் உருவங்கள், மொழிபெயா்ப்பு என ஆய்வு நோக்கில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.
தமிழ் இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையா், ரசிகமணி டி.கே.சி., பேராசிரியா் எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆகியோரை முக்கிய விமா்சகா்களாகவும் அவா் குறிப்பிடுகிறாா்.
தொடா்கதைகள், நாவல்களுக்கிடையேயான வேறுபாடு, புதுக்கவிதைக்கான இலக்கண மரபுகளையும் நூலில் தெளிவாக க.நா.சு. விளக்கியுள்ளாா். இலக்கியத்துக்கு அளவுகோல் வைத்து விமா்சிப்பது சரியல்ல எனக் கூறுவதுடன், விமா்சனம் என்பதை குற்றங்குறை கூறுவதாக எடுத்துக்கொள்வதையும் ஏற்க முடியாது என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளாா்.
தமிழ் இலக்கியத்துக்கு பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்தும் நூலில் அலசப்பட்டுள்ளது. க.நா.சு.வின் இந்த கிளாசிக் நூலானது படைப்பாளிகளுக்கும் இலக்கிய வாசகா்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.