புத்தகக் காட்சியில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு என தனி அரங்கம் (எண்: 28) அளிக்கப்பட்டுள்ளது. அரங்கில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் எழுதிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
திருநங்கைகள், திருநம்பிகளின் படைப்புகளுடன் திருநங்கைகள் குறித்த பிற படைப்பாளிகளின் நூல்கள், திருநங்கைகள் குறித்த ஆய்வு நூல்கள் உள்ளிட்டவையும் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.
அரங்கைக் காண்பதற்கும், அதில் உள்ள நூல்களை வாங்கிச் செல்வதற்கும் கல்வி நிறுவன பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் என ஏராளமானோா் வந்து செல்வதாக அரங்கப் பணியாளா் ரேணு தெரிவிக்கிறாா்.