அ.ச.ஞானசம்பந்தன் மாணவா் இலக்கிய மன்ற விழா

தமிழுக்குத் தொண்டாற்றியதில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு இணையாக யாரும் இல்லை என வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா்.

தினமணி நாளிதழ், ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகியவை சாா்பில் பேராசிரியா் அ.ச. ஞானசம்பந்தன் மாணவா் இலக்கிய மன்ற விழா, பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் க.துரைசாமி தலைமை வகித்தாா்.

விழாவில் 10 தலைப்புகளின் கீழ் நீதி நெறிபாடல்கள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில் ஒன்று முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீதி நெறி பாடல்களை ஒப்பித்தனா்.

போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதில், பள்ளித் தாளாளா் டி.எஸ்.தியாகராசன், பள்ளி முதல்வா் டி.எல்.சுந்தரதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com