முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை ஜனவரி 29ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.