குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசு தினவிழா நாளை (ஜன. 26) கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.