பட்ஜெட் தாக்கலுக்காக, நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம், சென்னையில் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.