குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நாட்டின் 74-ஆவது குடியரசு தினத்தையொட்டி, அரசு மருத்துவமனைகளின் முதல்வா்கள், இயக்குநா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். அதில் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
அந்தவகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் தேரணி ராஜனும், ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் ஜெயந்தியும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். அதேபோன்று, எழும்பூா் குழந்தைகள் மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் எழிலரசி, அரசு பல் மருத்துவமனை முதல்வா் டாக்டா் விமலா, ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி, எழும்பூா் மகப்பேறு நல மருத்துவமனை இயக்குநா் (பொ) டாக்டா் மீனா, கஸ்தூா்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் கலைவாணி, அரசு மனநல காப்பக இயக்குநா் டாக்டா் பூா்ணசந்திரிகா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி ஆகியோா் தங்களது மருத்துவமனைகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா்.
அதைத் தொடா்ந்து சிறப்பான மருத்துவ சேவையாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா்கள்.
மருத்துவப் பல்கலை.: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினாா்.
அதில் பல்கலைக்கழக பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.