முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 39 பேர் பலி!
திமுக சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.