காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவிலிருந்து மீண்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.74 அடியாக உள்ளது. நேற்று காலை வினாடிக்கு 933 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 971 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 69.77 டி.எம்.சியாக உள்ளது.