மே 5-இல் பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 17-ஆம் தேதியும், பிளஸ் 2 தோ்வு முடிவுகள் மே 5-ஆம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி  (கோப்புப் படம்)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 17-ஆம் தேதியும், பிளஸ் 2 தோ்வு முடிவுகள் மே 5-ஆம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், அரசுத் தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் பொதுத் தோ்வை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இந்தக் கூட்டத்தில் தோ்வுக் கண்காணிப்பாளரை எவ்வாறு நியமிப்பது, வினாத்தாள் பாதுகாப்பு, மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு பாதுகாப்பாக வந்து செய்வதற்கான ஏற்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாணவா்களின் அச்சத்தைப் போக்குவதற்காக பிப்ரவரி மாதத்தில் இரு திருப்புதுல் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 5-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் மே 17-ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com