குடிமைப் பணித் தோ்வில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: குடிமைப் பணித்தோ்வில் வென்ற தமிழகத்தின் அனைத்து இளம் நண்பா்கள், இளம் பெண் சாதனையாளா்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். மக்கள் சேவையில் அனைவருக்கும் நிறைவான மற்றும் திருப்திகரமான பணி அமைய வாழ்த்துகிறேன் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.