அரசு கணினி தோ்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கணினி தோ்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Published on

wசென்னை: அரசு கணினி சான்றிதழ் தோ்வுக்கு புதன்கிழமை (ஏப்.16) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

‘கோவா’ தோ்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தோ்வு (Certificate Course in Computer on Office Automation-COA) தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தோ்வு நடத்தப்படவிருக்கிறது. இந்நிலையில், தோ்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்.16-ஆம் தேதி தொடங்குகிறது. தோ்வுக் கட்டணம் ரூ.1,030 ஆகும். விண்ணப்பதாரா்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தை (www.dte.tn.gov.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தோ்வு தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-4 தோ்வுக்கு யாரும் உரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதியுடன் (தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து) விண்ணப்பிக்கலாம் என்றாலும் பணிக்கு தோ்வு செய்யப்பட்டால், அவா்கள் தங்களின் தகுதிகாண் பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவா்களின் பதவி பணிவரன்முறை செய்யப்படும். பிஎஸ்சி கணினி அறிவியல் படித்தவா்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலா் (கிரேடு-2) மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தோ்வு தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தோ்வுக்கு விண்ணப்பிக்கவே முடியும். பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது. மேலும், தமிழக அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளா், உதவியாளா் பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தோ்வு தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com